Last Updated : 31 Aug, 2017 02:08 PM

 

Published : 31 Aug 2017 02:08 PM
Last Updated : 31 Aug 2017 02:08 PM

ஓவியாவை திருமணம் செய்து கொள்வீர்களா?- ஆரவ்வின் பதில்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியாவை திருமணம் செய்து கொள்வேனா என்ற கேள்விக்கு ஆரவ் பதிலளித்துள்ளார்.

ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா குறித்து ஆரவ்விடம் கேள்விகளை எழுப்பியது சுவாரஸ்யமாக இருந்தது. இதனை ஆர்த்தி மற்றும் காஜல் இருவரும் கேட்டார்கள். அதன் தொகுப்பு:

ஆர்த்தி: இந்த வீட்டில் ஓவியாவை மிஸ் பண்ணுகிறீர்களா?

ஆரவ்: கண்டிப்பாக இந்த வீட்டில் ஓவியாவை மிஸ் பண்றேன். 2- 3 நாட்கள் அவர் இல்லாதது கஷ்டமாக இருந்தது

ஆர்த்தி: ஓவியாவுக்கு இப்போது எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள். அவரும் உங்களை மிஸ் பண்ணுவார் என நினைக்கிறீர்களா?

ஆரவ்: அவர் நல்லபடியாக இருப்பார் என நம்புகிறேன்.

ஆர்த்தி: 100 நாட்கள் முடித்து ஜெயித்து வெளியே போகும் போது, ஓவியா நின்று கொண்டிருந்தால் உங்களுடைய ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?

ஆரவ்: சந்தோஷமாக இருக்கும்.

ஆர்த்தி: அப்போதும் காதலை வெளிப்படுத்தினால்...

ஆரவ்: ஏங்க.. திரும்ப திரும்ப அதே பேச்சுக்கு வருகிறீர்கள். அதை அப்போது பார்ப்போம். நான் அதைப்பற்றி எதுவுமே யோசிக்கவில்லை. அவரோடு நல்ல நட்பில் இருந்தேன். யாருமே அவரிடம் பேசாமல் இருந்த போது, நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஆர்த்தி: இவ்வளவு கேமிராவுக்கு முன்பு ஒரு பெண் தைரியமாக காதலைச் சொன்ன போது, நீங்கள் மாட்டேன் என்ற போது வருந்தினேன். அவர் ஒரு நாயகி, அவருடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் கூறினாரே..

ஆரவ்: அதை மட்டும் எண்ணத்தில் வைத்துக் கொண்டு சரி என்று சொல்லியிருந்தால் தப்பாகி இருக்கும். எனது பெற்றோர்களைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். அவர் சொன்னார் என்பதற்காக சம்மதம் சொல்லிவிட முடியாது.

காஜல்: உங்கள் வீட்டில் சம்மதம் தெரிவித்தால்...

ஆரவ்: பார்க்கலாம்.. இதற்கு மேல் இதைப் பற்றி பேச வேண்டாம். போதும்.

ஆர்த்தி - காஜல் மற்றும் ஆரவ் ஆகியோருக்கு இடையேயான உரையாடலில், இறுதிவரை 'ஓவியாவை நான் காதலிக்கவில்லை' என்று ஆரவ் பதிலளிக்காதது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x