Published : 27 Dec 2016 05:39 PM
Last Updated : 27 Dec 2016 05:39 PM
இப்படத்தில் பங்காற்றியிருக்கலாமே என உண்மையாக நினைத்தேன் என்று 'சென்னை 28' 2-ம் பாகத்தின் படக் குழுவினருக்கு தன் ஏக்கம் சொல்லி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவா, ஜெய், பிரேம்ஜி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சென்னை- 28' 2ம் பாகம். யுவன் இசையமைத்துள்ள படத்தை வெங்கட்பிரபுவே தயாரித்துள்ளார்.
டிசம்பர் 8ம் தேதி வெளியான இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் 'சென்னை 28' 2ம் பாக படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஸ்வின், "சென்னை 28 (2) என்ன ஒரு அற்புதமான படம்! எனது மொத்த வாழ்க்கையை பின்னால் நகர்த்தியதைப் போல உணர்ந்தேன். படத்தில் பங்காற்றியிருக்கலாமே என உண்மையாக நினைத்தேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வீரர் அஸ்வினின் பாராட்டு, 'சென்னை 28' 2ம் பாக படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT