Last Updated : 08 Dec, 2016 05:27 PM

 

Published : 08 Dec 2016 05:27 PM
Last Updated : 08 Dec 2016 05:27 PM

கோடை விடுமுறை வெளியீட்டுக்கு தயாராகும் செல்வராகவன் - சந்தானம் படம்

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தை, கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு. அப்பணிகள் முடிந்தவுடன், வெளியீட்டு தேதியை முடிவு செய்யவிருக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நாயகியாக புதுமுகம் அதிதி நடித்து வருகிறார். யுவன் இசையமைக்க இருக்கிறார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காதல் சார்ந்த கதை களம் கொண்ட படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பதால், இப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஹைதராபாத், கும்பகோணம் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x