Last Updated : 08 Dec, 2016 11:19 AM

 

Published : 08 Dec 2016 11:19 AM
Last Updated : 08 Dec 2016 11:19 AM

நடிகர் சங்கத்தில் பிளவா?- என்ன சொல்கிறார் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்தவொரு பிளவும் இல்லை என்று தெரிவித்தார் நடிகர் விஷால்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சோ ராமசாமி இருவருக்கும் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது நடிகர் சங்கத் தலைவர் நாசருடன் துணைத்தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மட்டுமே வந்தனர். செயலாளர் விஷால் தனியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். விஷால் தனியாக வந்தவுடன், அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக விஷாலிடம் கேட்ட போது, "எனக்கு சில நாட்களாக கடுமையாக காய்ச்சல். படப்பிடிப்பைக் கூட ரத்து செய்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா மற்றும் சோ இருவருக்கும் அஞ்சலி செலுத்த நடிகர் சங்க நிர்வாகிகள் சென்ற போது, என்னால் அவர்களோடு இணைந்து வரமுடியவில்லை.

இது இப்படியொரு செய்தியாகும் என்று நினைக்கவில்லை. மேலும், தற்போது நடிகர் சங்க அலுவலகத்தில் தலைவர் நாசர் மற்றும் துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோருடன் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x