Published : 07 Nov 2022 09:01 AM
Last Updated : 07 Nov 2022 09:01 AM

நடிகை த்ரிஷா காயம்

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவைபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.ரசிகர்கள் மத்தியில் அவர் பாத்திரத்துக்குபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலாசென்றிருந்தார். அங்கிருந்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், அவர் தனது காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் காலில் ஏற்கனவே வலி இருந்ததாகவும் அது வீங்கியதால் சிகிச்சை பெற்றதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாவை பாதியில் முடித்துவிட்டு சென்னைத் திரும்பிய அவர் ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு நடத்திய பார்ட்டியில் கலந்துகொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x