Last Updated : 29 Nov, 2016 05:02 PM

 

Published : 29 Nov 2016 05:02 PM
Last Updated : 29 Nov 2016 05:02 PM

கடிதம் மூலம் கேட்டால் ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கத் தயார்: ராதிகாவுக்கு கார்த்தி பதில்

கடிதம் மூலமாக கேட்டால் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கத் தயார் என்று ராதிகாவுக்கு பொருளாளர் கார்த்தி பதிலளித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இருவரின் நீக்கத்தைத் தொடர்ந்து, ராதிகா அளித்த பேட்டியில் கார்த்தி மற்றும் விஷால் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கார்த்தி, "இதுவரை நாங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், அதை ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுத்திருக்கிறோம். அனைத்து விஷயத்துக்குமே ஆதாரம் இல்லாமல் முடிவு எடுப்பது முட்டாள்தனம் என்பது எனக்கு தெரியும். அனைத்துக்குமே சாட்சி இருப்பதால் மட்டுமே பொதுக்குழுவில் முன் வைக்கிறோம்.

முன்னாள் நிர்வாகிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு மீடியாவில் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. முறையாக கடிதம் அனுப்பிக் கேட்டால் பதில் சொல்ல முடியும்" என்று தெரிவித்திருக்கிறார் கார்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x