Published : 15 Oct 2022 03:57 PM
Last Updated : 15 Oct 2022 03:57 PM

உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்த காந்தாரா - கன்னட சினிமாவில் 6-வது இடம்

காந்தாரா பட ஸ்டில்

ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள 'காந்தாரா' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பெரிய திரையில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள கன்னட திரைப்படம் 'காந்தாரா' (Kantara). பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக கந்தாரா வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதை உடன் படத்துக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இதை உணர்ந்த படக்குழு படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில் படம் இன்று (அக்டோபர் 15) திரையரங்குகளில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படம் உலகம் முழுக்க ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் கன்னட சினிமாவில் ரூ.100 கோடி வசூலில் இணைந்த 6-வது படமாக இந்தப்படம் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக யஷ் நடிப்பில் வெளியான 'கேஜிஎஃப் 2' உலகளவில் ₹1207 கோடி வசூலித்து முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தில் கேஜிஎஃப் முதல் பாகம் ரூ.250 கோடியை வசூலித்தது. மூன்றாவதாக கிச்சா சுதீப்பின் 'விக்ராந்த் ரோனா' ரூ.159 கோடி, நான்காவதாக புனித் ராஜ்குமாரின் 'ஜேம்ஸ்' (₹151 கோடி) மற்றும் '777 சார்லி' ₹105 கோடியை வசூலித்தது. இந்நிலையில் இந்த வரிசையில் 6-வது படமாக 'காந்தாரா' இணைந்துள்ளது. திரையரங்குகள் இன்னும் நிரம்பியிருப்பதால், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் டப்பிங்களில் படம் வெளியாகியுள்ளதால், வசூல் எண்ணிக்கை நிச்சயமாக மேலும் உயரும் என கணிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x