தெருக்களில் யாசகம் பெறும் பிரபல நடிகை

தெருக்களில் யாசகம் பெறும் பிரபல நடிகை
Updated on
1 min read

இந்தி நடிகை நுபுர் அலங்கர். ‘சக்திமான்’ உட்பட ஏராளமான சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கணவர் அலங்கர் ஸ்ரீவத்சவாவும் நடிகர்தான். 49 வயதான நுபுர், சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசி ஆகி இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இனி என் வாழ்க்கையில் சினிமா இல்லை. அனைத்து எதிர்பார்ப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். என வாழ்க்கை முறையை எளிமைப்படுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் மதுராவில் பக்தர்களிடம் யாசகம் பெறும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கிடைத்த பணத்தையும் உணவு, தேநீர் உள்ளிட்டவற்றையும் பற்றி பேசியுள்ள அவர், தினமும் 12 பேரிடம் யாசகம் பெற்று உண்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in