Published : 19 Nov 2016 04:47 PM
Last Updated : 19 Nov 2016 04:47 PM

அரசியல் கதையை உருவாக்கிய மணிரத்னம்

'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காற்று வெளியிடை'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. கார்த்தி மற்றும் அதர்வா இருவரும் நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்திக்கு சுஹாசினி மணிரத்னம் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மணிரத்னம் தன்னை அணுகவில்லை என்று கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

அவருடைய அடுத்த படத்தின் திட்டம் குறித்து விசாரித்த போது, "'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை இன்னும் இறுதிசெய்யவில்லை. ஆனால் நீண்ட நாட்களாக அரசியல் சார்ந்த 'எதிர்க்கட்சி' என்ற தலைப்பில் ஒரு கதையை உருவாக்கி வைத்திருப்பது உண்மை தான். அப்படம் அடுத்த படமாக இருக்குமா என்பதை 'காற்று வெளியிடை' முடிந்தவுடன்தான் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x