Published : 02 Oct 2022 02:11 PM
Last Updated : 02 Oct 2022 02:11 PM

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன் வசூல்

விக்ரம்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ.50 கோடியை நெருங்க உள்ளது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்தது.

பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், படம் முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் ரூ.80 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இரண்டாவது நாள் படம் ரூ.70 கோடியை நெருங்கியுள்ள நிலையில், மொத்தமாக இரண்டு நாட்கள் முடிவில். உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்நாள் ரூ.25.86 கோடியையும், இரண்டாவதுநாளான நேற்று ரூ.21.34 கோடியை வசூலித்து மொத்தம் ரூ.47.20 கோடியை எட்டியுள்ளது. விரைவில் படம் ரூ.100 கோடி க்ளப்பில் இணையும் என திரை வர்த்தகர்களால் கணிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x