செப்.30-ல் ஓடிடியில் வெளியாகிறது ஆர்யாவின் ‘கேப்டன்’

செப்.30-ல் ஓடிடியில் வெளியாகிறது ஆர்யாவின் ‘கேப்டன்’
Updated on
1 min read

ஆர்யா நடிப்பில் வெளியான ‘கேப்டன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கேப்டன்'. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஆதித்யா மேனன், கோகுல்நாத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்த இப்படத்தை ஆர்யா தயாரித்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. ரூ.30 கோடி - 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனால் படம் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில், 'கேப்டன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in