Published : 31 Oct 2016 10:40 AM
Last Updated : 31 Oct 2016 10:40 AM
2017-ல் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
'வடசென்னை', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. மேலும், தனுஷ் நடிப்பில் உருவான 'கொடி', தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்திருக்கிறது.
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் 'பவர் பாண்டி' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ஹாலிவுட் படம் என பல்வேறு படங்கள் தனுஷிற்கு வரிசையில் இருக்கிறது. இப்படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இப்படம் உலக சினிமா ரசிகர்களுக்கான ஒரு கனவு படமாக இருக்கும் என்றும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'பவர் பாண்டி'யில் 2 பாடல்களை எழுதியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். ஒரு பாடலை 2 நிமிடத்திலும், மற்றொரு பாடலை 5 நிமிடத்திலும் செல்வராகவன் எழுதிக் கொடுத்ததாக தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தான் இயக்கிய படங்களுக்கு மட்டுமே, பாடல்கள் எழுதி வந்த இயக்குநர் செல்வராகவன் முதல் முறையாக தனுஷ் இயக்கிவரும் படத்துக்குப் பாடல்கள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT