Published : 04 Oct 2016 05:15 PM
Last Updated : 04 Oct 2016 05:15 PM
ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள்.
1980 - 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.
முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவிலேயே முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
முழுக்க நட்பை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள் கெளரவ தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT