Published : 11 Jun 2014 09:00 AM
Last Updated : 11 Jun 2014 09:00 AM

எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ் நாளை விநியோகம்

எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நாளை வழங்கப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிந்தது. தனித்தேர்வர்கள் உள்பட 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு மே 23-ம் தேதி வெளியானது. அன்றைய தினமே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்புக்காக 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவுசெய்ய பள்ளியிலேயே ஆன்லைன் வசதிக்கும் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. சான்றிதழ் வாங்க வரும் மாணவ, மாணவிகள் இருப்பிட முகவரிக்காக ரேஷன் அட்டை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x