Published : 27 May 2022 04:58 AM
Last Updated : 27 May 2022 04:58 AM

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம், ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘விக்ரம்’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கக்கோரி படத்தை தயாரித்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, நீதிபதி சி.சரவணன் முன்பாக நடந்தது.

அப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ‘‘கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களைக் கொண்டு அதிக பொருட்செலவில் ‘விக்ரம்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சட்ட விரோதமாக இணையதளங்களில் இப்படத்தை வெளியிடக் கூடாது என இணையதள சேவை நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

அதையேற்ற நீதிபதி சி.சரவணன், ‘விக்ரம்’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோஉள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x