Last Updated : 11 Apr, 2016 02:09 PM

 

Published : 11 Apr 2016 02:09 PM
Last Updated : 11 Apr 2016 02:09 PM

லைக்கா தயாரிப்பில் உருவாகிறது வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 'வடசென்னை' படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

தனுஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் படம் ஒன்றைத் தொடங்கினார்கள். அப்படத்தை தனுஷ் தயாரிக்க முன்வந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் 'விசாரணை' படத்தை தனுஷ் தயாரிப்பில் இயக்கினார். 3தேசிய விருதுகள் வென்றது மட்டுமன்றி, படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அப்படம் முடிந்தவுடன் தனுஷை நாயகனாக வைத்து 'வடசென்னை' படத்தை இயக்கவிருப்பதாக வெற்றிமாறன் கூறினார்.

வெற்றிமாறன் நீண்ட நாட்களாக தயார் செய்து வைத்திருக்கும் கதை 'வடசென்னை'. முதலில் சிம்பு நடிப்பதாக இருந்து தற்போது தனுஷ் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 'கொடி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட படங்களுக்கு தனுஷ் தேதிகள் ஒதுக்கியதால் 'வடசென்னை' எப்போதும் தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது 'வடசென்னை' படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. லைக்கா நிறுவனம் வழங்க தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

மேலும், இரண்டு பகுதிகளாக உருவாக இருந்த 'வடசென்னை' திரைப்படம் தற்போது ஒரே பகுதியாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x