Published : 21 Feb 2022 11:23 AM
Last Updated : 21 Feb 2022 11:23 AM

யுவன் சங்கர் குரலில் இளையராஜா வரிகள்

மனிஷா யாதவ்

இளையராஜாவின் 1,417-வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை ஆதிராஜன் இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, பிஎல்.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில், ‘இதயமே இதயமே இதயமே... உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே’ என்று தொடங்கும் பாடலைஇளையராஜா எழுதியுள்ளார். இயக்குநர் ஆதிராஜன்கூறும்போது, ‘‘நீங்கள் ஒரு பாடல் எழுதினால் நன்றாக இருக்கும் என இளையராஜாவிடம் கேட்டபோது, உடனே எழுதிக் கொடுத்தார். யுவன் சங்கர் ராஜா பாடவேண்டும் என்ற ஆசையை சொன்னதும் யுவனை அழைத்துப் பாட வைத்தார். மும்பையை சேர்ந்த பாடகி ஷாவுடன் இணைந்து அவர் பாடியுள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x