Published : 16 Feb 2022 04:08 PM
Last Updated : 16 Feb 2022 04:08 PM

சிம்புவின் 50-வது படத்தை இயக்குகிறார் ராம்?

சிம்புவின் 50-வது படத்தை ராம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சி, ஒய்.ஜி.மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. யுவன் இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.‘மாநாடு’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதுதான் சிம்புவின் கம்பேக் என சினிமா விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.

இப்படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படங்கள் தவிர்த்து ‘பத்து தல’ மற்றும் ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட படங்களில் சிம்பு நடிக்கிறார்.

இந்நிலையில் சிம்புவின் 50-வது படத்தை இயக்குநர் ராம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நீண்ட நாட்களாக நடைபெறுவதாகவும் விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ தகவகள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ’மாநாடு’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சியே தயாரிக்கவுள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x