Last Updated : 27 Apr, 2016 07:14 PM

 

Published : 27 Apr 2016 07:14 PM
Last Updated : 27 Apr 2016 07:14 PM

ராம்குமார் - ஜெய் இணையும் ராட்சசன்

'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஜெய் நடிக்கவிருக்கும் படத்திற்கு 'ராட்சசன்' என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

'புகழ்' படத்தைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கான கதைகளைக் கேட்டு வந்தார் ஜெய். பல இயக்குநர்கள் கூறிய கதைகளில் 'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உடனே மே மாதத்தில் இருந்து தேதிகள் ஒதுக்கிக் கொடுத்தார்.

சி.வி.குமார் தயாரிக்கவிருக்கும் இப்படம் ஒரு போலீஸ் கதையாகும். ஜிப்ரான் இசையமைப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ஜெய் உடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்திற்கு 'ராட்சசன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'சென்னை 28' இரண்டாம் பாகம் மற்றும் 'ராட்சசன்' ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே சமயத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x