மீண்டும் இணையும் அமீர் - வெற்றிமாறன் கூட்டணி

மீண்டும் இணையும் அமீர் - வெற்றிமாறன் கூட்டணி
Updated on
1 min read

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்துக்கு வெற்றிமாறன் கதை எழுதுகிறார்.

‘மவுனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘ஆதி பகவன்’ என்ற படத்தை இயக்கினார்.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்துக்குப் பிறகு அமீர் எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். ‘யோகி’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவரது ‘ராஜன்’ கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் - அமீர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்துக்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார்.

விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட தகவல்களை அறிவிக்கவுள்ளதாகவும் அமீர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in