Published : 12 Apr 2016 10:17 AM
Last Updated : 12 Apr 2016 10:17 AM
தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது மிக சவாலானது என நடிகர் பகத் பாசில் தெரிவித்துள்ளார்.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து 24AM ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தற்போது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நாயகனாக வலம் வரும் பகத் பாசில் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் அறிமுகமாக இருப்பது குறித்து பகத் பாசில் "தமிழ் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு.அதிலும் 'தனி ஒருவன்' படம் பார்த்தப் பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் என சொல்லலாம்.நேர்த்தியான இயக்கம், அருமையானக் காட்சி அமைப்பு என இயக்குநர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னை பொறுத்த வரை மேல் நாட்டு இயக்குனர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன்.
இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு மட்டற்ற பெருமை. மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானதுக் கூட. என்னுடையக் கதாப்பாத்திரம் தமிழ் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் பகத் பாசில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT