Last Updated : 08 Mar, 2016 01:59 PM

 

Published : 08 Mar 2016 01:59 PM
Last Updated : 08 Mar 2016 01:59 PM

மீண்டும் இணையும் மிருதன் கூட்டணி

'மிருதன்' கூட்டணியான இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் மற்றும் ஜெயம் ரவி இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. இமான் இசையமைத்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது. வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது 'மிருதன்' படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் மற்றும் ஜெயம் ரவி இணைந்து படம் பண்ணவிருக்கிறார்கள். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மேலும், 'மிருதன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி 'போகன்' படத்தில் ஹன்சிகா, அரவிந்த்சாமி ஆகியோருடன் நடிக்க இருக்கிறார். 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கவிருக்கும் இப்படத்தை பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

'போகன்' படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜெயம் ரவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x