Published : 27 Dec 2021 07:05 PM
Last Updated : 27 Dec 2021 07:05 PM
'புலியும் பாம்பும் நலம்' என தன் தந்தையிடம் பகிர்ந்ததாக பாம்பு கடித்த சம்பவம் குறித்து கலகலப்புடம் விவரித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
பாலிவுட் நடிகர் சல்மான் இன்று (டிச.27) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரலங்களும், நெட்டிசன்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சமீபத்தில் தன்னை பாம்பு கடித்தது பற்றி சல்மான் கான் அளித்த பேட்டியில், “கடந்த 25 ஆம் தேதி பண்ணை வீட்டில் இருக்கும்போது பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. நான் கையில் குச்சியை எடுத்துக் கொண்டு பாம்பை விரட்டச் சென்றேன். பாம்பு என் கையில் ஏறிவிட்டது. என்னை மூன்று முறை பாம்பு கடித்தது. இதனைத் தொடர்ந்து நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
எனக்கு 6 மணி நேரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நான் தற்போது நலமாக இருக்கிறேன். பாம்பு பண்ணை வீட்டிற்கு வெளியேவிடப்பட்டது. அது வேறு இடத்திற்கு சென்றிருக்கும் என்று நினைகிறேன்” என்று தெரிவித்தார்.
தன்னை பாம்பு கடித்தது குறித்து நலம் விசாரித்த தன்னுடைய தந்தையிடம் கலகலப்புடன் தெரிவித்ததையும் பகிர்ந்திருக்கிறார். அதில், "பாம்பு கடித்த நிகழ்வுக்குப் பிறகு, அப்பா என்னைப் பதற்றத்துடன் அழைத்து விசாரித்தார். பாம்பு நலமுடன் இருக்கிறதா என்று கேட்டார். அவரிடம் நான் 'புலி, பாம்பு ரெண்டு பேருமே நலம்' என்றேன். பாம்பை பத்திரமாக அன்போடு காட்டில் விட்டதையும் அவரிடம் சொன்னேன்" என்றார் சல்மான் கான்.
சல்மான் கானின் ஹிட் படங்களில் 'ஏக் தா டைகர்' மற்றும் 'டைகர் ஹிந்தா ஹே' ஆகியவை அடங்கும். அந்தப் படங்களை ரெஃபர் செய்யும் விதமாக தன்னை புலியாக உருவகப்படுத்தி தன் தந்தையும் கலகலப்புடன் பேசியிருக்கிறார் சல்மான் கான்.
மேலும், ஷாருக் கானுடன் விரைவில் இணைந்து படம் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சல்மான் அந்த நேர்காணலில்தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT