Published : 14 Dec 2021 01:17 PM
Last Updated : 14 Dec 2021 01:17 PM

மாஸ்டர் மகேந்திரன், சந்தோஷ், மைக்கேல் தங்கதுரை இணையும் க்ரைம் த்ரில்லர் படம்

மாஸ்டர் மகேந்திரன், சந்தோஷ் பிரதாப், மைக்கேல் தங்கதுரை இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

ப்ளாக்ஹோல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் மாஸ்டர் மகேந்திரன், சந்தோஷ் பிரதாப், மைக்கேல் தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர். குறும்பட இயக்குநர் ஏ.ஆர்.ஸ்டீபன் இயக்கும் இப்படம் ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதில் வைஷ்ணவி, ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (டிச.13) தொடங்கியது.

இப்படம் குறித்து மாஸ்டர் மகேந்திரன் கூறியிருப்பதாவது:

''இப்படம் ஒரு ஆந்தாலஜி படம் போன்றது. இதில் எனக்கும், சந்தோஷ் பிரதாப் மற்றும் மைக்கேல் தங்கதுரை ஆகியோருக்கும் தனித்தனி கதைகள் இருக்கும். அவை மூன்றும் க்ளைமாக்ஸை நோக்கியே நகரும். இந்த மூன்று கதைகளும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படக்குழுவில் உள்ள அனைவரும் இளைஞர்கள். இதில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது''.

இவ்வாறு மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x