Last Updated : 27 Mar, 2016 04:57 PM

 

Published : 27 Mar 2016 04:57 PM
Last Updated : 27 Mar 2016 04:57 PM

படப்பிடிப்பில் விபத்து: உயிர் தப்பினார் ஜி.வி.பிரகாஷ்

'கடவுள் இருக்கான் குமாரு' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் சிறுகாயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. இப்படத்தின் நாயகிகளாக அவீகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்கள். தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி. 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் முக்கிய பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியைப் படமாக்கி வந்தார்கள்.

அப்போது கண்டெய்னர் லாரி மோதியதில் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவார் மீது மோதியது. இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்றவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சென்னை, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட பல படங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x