Published : 06 Dec 2021 11:28 AM
Last Updated : 06 Dec 2021 11:28 AM

‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படப்பிடிப்பு நிறைவு

லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கத்தில் மம்முட்டி நடித்து வந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. 'ஆமென்', 'அங்காமலி டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

கடந்த ஆண்டு வெறும் 19 நாட்களில் ‘சுருளி’ என்ற படத்தை எடுத்து முடித்தார். இப்படம் கடந்த நவ.19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை லிஜோ ஜோஸ் இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் - மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டி தயாரிக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பழனி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் (05.12.21) நிறைவடைந்தது. எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை ஒரே கட்டமாக முடித்து இப்படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x