பாலா இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சூர்யா?

பாலா இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சூர்யா?

Published on

பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். ஆனால், இப்படத்துக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே வெற்றிமாறன் படத்துக்கு முன்பாக பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று பட வட்டாரத்தில் கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. தற்போது சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in