Last Updated : 31 Mar, 2016 10:35 AM

 

Published : 31 Mar 2016 10:35 AM
Last Updated : 31 Mar 2016 10:35 AM

செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி: உருவாகிறது புதிய கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க புதிய படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'கான்' படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து தனது அடுத்து படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் செல்வராகவன். அப்போது தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதியை செல்வராகவன் இயக்க ஒரு படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இடையே, கெளதம் மேனன் தயாரிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடங்கினார். எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், ஒரே கட்டமாக இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் செல்வராகவன். சுமார் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் செல்வராகவன். ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதால் விஜய் சேதுபதியும் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

தற்போது 'ஆண்டவன் கட்டளை', 'றெக்க', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படம் அடுத்தாண்டு தொடங்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x