Last Updated : 01 Nov, 2021 08:00 PM

 

Published : 01 Nov 2021 08:00 PM
Last Updated : 01 Nov 2021 08:00 PM

சிரஞ்சீவிக்கு நாயகியாகும் ஸ்ருதிஹாசன்?

சிரஞ்சீவி நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'ஆச்சாரியா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. அதற்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். 'காட்ஃபாதர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கான 'போலா ஷங்கர்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாபி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிரஞ்சீவி. இது அவரது நடிப்பில் உருவாகும் 154-வது படமாகும்.

இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இன்னும் படப்பிடிப்பு எப்போது என்பது முடிவாகாத காரணத்தால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் உள்ளார் ஸ்ருதிஹாசன்.

விரைவில் படத்தின் பூஜையை நடத்தி பணிகளைத் தொடங்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x