Published : 25 Oct 2021 12:25 PM
Last Updated : 25 Oct 2021 12:25 PM
திரைவானின் சூரியன் ரஜினி என்று தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி மற்றும் இயக்குநர் பாலசந்தர் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பலரும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்"
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) October 25, 2021
திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT