Published : 20 Oct 2021 08:17 PM
Last Updated : 20 Oct 2021 08:17 PM

'புஷ்பா' படத்துக்குப் போட்டியாகக் களமிறங்கும் 'எதற்கும் துணிந்தவன்'?

'புஷ்பா' படத்துக்குப் போட்டியாக டிசம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது 'எதற்கும் துணிந்தவன்'.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படம் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டீஸர் மற்றும் 2 பாடல்களை மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்களை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்துக்குப் போட்டியாக, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்காக படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். 'அண்ணாத்த' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை முடித்துவிட்டு, 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x