Published : 17 Oct 2021 03:44 PM
Last Updated : 17 Oct 2021 03:44 PM

மீண்டும் தனுஷுடன் இணையும் யோகி பாபு

சென்னை

'நானே வருவேன்' படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் யோகி பாபு

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பை முடித்து விட்டார் தனுஷ். இதனைத் தொடர்ந்து 'மாறன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் தனுஷ்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை தாணு தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் யோகி பாபு. 'கர்ணன்' படத்துக்குப் பிறகு தனுஷ் - யோகி பாபு இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அரங்குகள் அமைத்து பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னமூர்த்தி, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x