Published : 08 Oct 2021 01:08 PM
Last Updated : 08 Oct 2021 01:08 PM

'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பை முடித்த தனுஷ்

சென்னை

'திருச்சிற்றம்பலம்' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் தனுஷ்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை என்பதால், ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டது.

அதைப்போலவே 50 நாட்களில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டுமொத்தமாக முடிக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். தற்போது 'மாறன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x