Published : 17 Sep 2021 05:34 PM
Last Updated : 17 Sep 2021 05:34 PM

விக்ரம் சுகுமாரனின் 'இராவண கோட்டம்' படப்பிடிப்பு நிறைவு

சென்னை

விக்ரம் சுகுமாரன் இயக்கி வந்த 'இராவண கோட்டம்' படப்பிடிப்பு நிறைவடைந்தது.

'மதயானைக் கூட்டம்' படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் 'இராவண கோட்டம்'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு.

இது தொடர்பாக விக்ரம் சுகுமாரன் தனது ட்விட்டர் பதிவில் "வெற்றிகரமாக ‘இராவண கோட்டம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. இதில் சாந்தனு, ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணிபுரிந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x