Published : 16 Sep 2021 10:53 AM
Last Updated : 16 Sep 2021 10:53 AM

'அரண்மனை 3' ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

'அரண்மனை 3' படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அரண்மனை 3'. இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அதில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்தது. அக்டோபரில் வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு.

தற்போது இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரபூர்வ அறிவித்தது மட்டுமன்றி, அக்டோபர் 14-ம் தேதி திரையரங்குகளில் 'அரண்மனை 3' வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர். விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

சுந்தர்.சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, விவேக், சாக்‌ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஆர்யாவுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், இசையமைப்பாளராக சத்யா, எடிட்டராக பென்னி ஆலிவர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x