Published : 11 Sep 2021 09:54 PM
Last Updated : 11 Sep 2021 09:54 PM

ஜெயம் ரவியின் புதிய படம் துவக்கம்

சென்னை

ஜெயம் ரவியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ஜெயம் ரவி. இதனால் அந்தப் படத்தின் கெட்டப்பிலிருந்து மாறி, தனது அடுத்த படத்தினை தொடங்கியுள்ளார்.

நேற்று (செப்டம்பர் 10) ஜெயம் ரவி பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு ஜெயம் ரவியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை 'பூலோகம்' இயக்குநர் கல்யாண் இயக்கி வருகிறார். இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக விவேக், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த வாரம் முழுவீச்சில் தொடங்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x