Published : 11 Sep 2021 09:17 PM
Last Updated : 11 Sep 2021 09:17 PM
நீ எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் ஜோ என்று நெகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. இந்த ஜோடி திரையிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே காதலித்து 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது. ஜோதிகா தனக்கு எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை பல்வேறு மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.
இன்று திருமண நாளை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் சூர்யா கூறியிருப்பதாவது:
"நீ எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் ஜோ. உங்கள் அனைவரது அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருடைய முதல் எழுத்தைக் கொண்டே 2டி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் சூர்யா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT