Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

போதை மருந்து விவகாரம்: நடிகர் நந்துவிடம் விசாரணை

ஹைதராபாத்

போதை மருந்து விவகாரத்தில் நேற்று தெலுங்கு நடிகர் நந்துவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், போதை மருந்து விற்பனை செய்யும் கெல்வின் வீட்டிலும் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.

போதை மருந்து விவகாரத்தில் நேற்று அமலாக்கப்பிரிவினர் ஹைதராபாத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் தெலுங்கு திரைப்பட நடிகர் நந்துவிடம் விசாரணை நடத்தினர். இவர்தான் எஃப்கிளப் நடத்துவது என்பதால், இவரையும், போதை மருந்து விற்பனையாளரான அப்ரூவர் கெல்வினையும் ஒரே சமயத்தில் ஆஜர்படுத்தி இருவரிடமும் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

இருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? எஃப் கிளப்புக்கு வரும் பிரமுகர்கள் யார் யார்? இதில் நடிகர், நடிகைகள் யார் யார்? கெல்வினின் போதை மருந்தை உபயோகப்படுத்துவது யார்? என சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனிடையே, நேற்று காலை ஹைதராபாத்தில் கெல்வினின் வீட்டில் அமலாக்கப்பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த சிலஆவணங்கள், லேப்டாப் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதில் இருந்த தகவலின்படி மேலும் ஒருவரை அமலாக்கப்பிரி வினர் நேற்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். இவர் கெல்வினின் உதவியாளர் என கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி, ரகுல் பிரீத் சிங் ஆகியோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணைநடத்தியுள்ளனர்.

இனி நடிகை முமைத்கான், நடிகர்கள் ராணா உள்ளிட்டோரிடம் விசாரிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x