Published : 22 Feb 2016 06:41 PM
Last Updated : 22 Feb 2016 06:41 PM
லட்சுமண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அரவிந்த்சாமி.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் 'மிருதன்' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜெயம் ரவி.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தை பிரபுதேவா தயாரிக்க இருக்கிறார். இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இரண்டு நாயகர்கள் கொண்ட கதைக்களம் என்பதால் ஜெயம் ரவியுடன் நடிக்கவிருப்பது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. தற்போது 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த அரவிந்த்சாமியை இப்படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் 'போகன்' என்று இப்படம் தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல்களை படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT