Published : 24 Aug 2021 06:44 PM
Last Updated : 24 Aug 2021 06:44 PM

கவுண்டமணி உடன் சந்திப்பு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

கவுண்டமணி உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கவுண்டமணியின் தீவிர ரசிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சிகளில் பணிபுரியும் போது, அவரைப் போன்றே மிமிக்ரி செய்பவர் சிவகார்த்திகேயன். மேலும், கவுண்டமணி நாயகனாக நடித்த படமொன்றின் இசை வெளியீட்டு விழா மேடையில், அவரைப் பற்றி புகழ்ந்து பேசியிருப்பார்.

தற்போது கவுண்டமணியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். அவருடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பதிவில் "சகாப்தம் கவுண்டமணி அவர்களுடன். அதிக உற்சாகத்துடனான சிறப்பான தருணம். என்றும் மறக்க முடியாத நாள்" என்று குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது 'டான்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும், அவருடைய நடிப்பில் தயாராக இருக்கும் 'டாக்டர்' வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருக்கிறது. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் 'அயலான்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x