Published : 23 Aug 2021 06:52 PM
Last Updated : 23 Aug 2021 06:52 PM

'சர்வைவர்' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிவிப்பு

சென்னை

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் 'சர்வைவர்' நிகழ்ச்சி போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய நிகழ்ச்சி 'சர்வைவர்'. இந்நிகழ்ச்சி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தீவில் பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் ஜெயிப்பவரே வெற்றியாளர் என்ற பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார் அர்ஜுன். இதில் போட்டியாளர்கள் யார் என்பதை தொலைக்காட்சி நிர்வாகம் அறிவிக்காமலேயே இருந்தது. தற்போது 'சர்வைவர்' நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது ஜீ தமிழ்த் தொலைக்காட்சி.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உமாபதி தம்பி ராமையா, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அனைவருமே ஒரு காட்டுக்குள் வெவ்வேறு இடங்களில் இருப்பது போல் இந்த ப்ரோமோவை வடிவமைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x