Published : 23 Aug 2021 03:12 AM
Last Updated : 23 Aug 2021 03:12 AM
தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்திவரும் நிவேதா பெத்துராஜ் இரு மொழிகளிலுமே, ஏதாவது ஒரு படத்தில் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தார். அந்த குறையை தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள ‘பாகல்’ திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது.
இந்த வெற்றியை சமீபத்தில் அவரே ஆனந்தக் கண்ணீர் விட்டு கொண்டாடித் தீர்த்துள்ளார். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனும் ‘பாகல்’ படக் குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதையடுத்து. நிவேதா பெத்துராஜுக்கு தற்போது தெலுங்கில் பல கதைகள் குவியத் தொடங்கியுள்ளன. இந்தபடம் வெளிவருவதற்கு முன்பாகவே 2 கதைகள் கேட்டு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்த புதியகதைகளையும் கேட்டு வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT