Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

அமைதியான பொண்ணு துஷாரா!

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன் நடிப்பில், ‘சார்பட்டாபரம்பரை’ படத்தை தொடர்ந்து ‘அன்புள்ள கிள்ளி’ என்ற படம் விரைவில்வெளிவர உள்ளது. இதற்கிடையில், வசந்தபாலன் இயக்கத்தில், அர்ஜுன்தாஸ் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து 2 படங்களுக்கு கதைகேட்டு வருகிறார். தனது திரைத் துறை அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

திண்டுக்கல் அடுத்த கன்னியாபுரம்தான் சொந்த ஊர். எங்க கிராமத்தில் மக்கள் எப்படி இயல்பாக இருப்பார்களோ, அதேமாதிரி எனக்கு ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஒரு கதாபாத்திரம் அமைந்தது பெரும் மகிழ்ச்சி. ‘போதையேறி புத்தி மாறி’ திரைப்படம்தான் என் முதல் படம். சிறப்பு தோற்றம் போல அதில்எனக்கு சிறிய கதாபாத்திரம்தான். அதற்கு முன்பு ‘சர்க்கார்’ திரைப்படத்தில் ஒரு காபிஷாப் காட்சியில் நடித்திருப்பேன். அது பெரிதாக யாருக்குமே தெரியாது. இப்போது ‘சார்பட்டா பரம்பரை’ எனக்கு அளித்துள்ள உயரம் மிகப் பெரிய இடம். 6-ம் வகுப்பு படிக்கும்போதிருந்தே எனக்கு நடிப்பின் மீது தனி பிரியம்இருந்தது. அது இப்போது நிறைவேறியதில் சந்தோஷம். இன்னும் விதவிதமான கதாபாத்திரங்களில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். அந்த வரிசையில் தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். ‘சார்பட்டா’ மாரியம்மாவுக்கு நேர் எதிரான பாத்திரம் அது. இப்படத்தில் ரொம்ப அமைதியான பெண்ணாக நடித்து வருகிறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x