Last Updated : 15 Feb, 2016 12:42 PM

 

Published : 15 Feb 2016 12:42 PM
Last Updated : 15 Feb 2016 12:42 PM

அடுத்த படத்தின் குழுவினருடன் விஜய் சந்திப்பு

'தெறி' படத்தைத் தொடர்ந்து உருவாக இருக்கும் படத்தின் குழுவினரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடி இருக்கிறார் விஜய்

'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார் பரதன், இயக்குநர் பரதன் ஏற்கனவே 'கில்லி', 'வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். மேலும், விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' படத்தையும் இயக்கி இருக்கிறார்.

விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பை மே முதல் வாரம் முதல் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை தயாரிக்கும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த மதி தேதிகள் பிரச்சினையால் விலக, தற்போது சுகுமாரை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தனது படக்குழுவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடி இருக்கிறார் விஜய். 'கில்லி' படத்தைப் போல திரைக்கதை அமைப்பு கொண்டிருப்பதால் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x