Last Updated : 16 Feb, 2016 06:13 PM

 

Published : 16 Feb 2016 06:13 PM
Last Updated : 16 Feb 2016 06:13 PM

மாயவன் மூலம் இயக்குநராக சி.வி.குமார் அறிமுகம்

'மாயவன்' என்ற புதிய படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தமிழ் சினிமாவில் சிறுபட்ஜெட்டில் படங்கள் தயாரித்து வெற்றியடைந்து வருபவர் சி.வி.குமார். இவருடைய தயாரிப்பில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் 'இறைவி' மற்றும் நலன் குமாரசாமி இயக்கி இருக்கும் 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இப்படங்களில் மார்ச் 11ம் தேதி 'காதலும் கடந்து போகும்' படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

புதிய படமொன்றை சி.வி.குமார் இயக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதை சி.வி.குமாரும் உறுதி செய்திருந்தார். அவர் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நேற்று(பிப்ரவரி15) முதல் தொடங்கியது.

'மாயவன்' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் சந்திப் கிஷன் மற்றும் லாவண்யா திரிபாதி ஆகியோர் நடித்து வருகிறார்கள். டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் நலன் குமாரசாமி. கோபி அமர்நாத் ஒளிப்பதிவையும், லியோ ஜான் பால் எடிட்டிங் பொறுப்பையும் கவனிக்க இருக்கிறார்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x