Published : 08 Jul 2021 11:59 AM
Last Updated : 08 Jul 2021 11:59 AM

சென்னையில் தொடங்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு

சிம்பு நடிக்கவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் - சிம்பு இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார்.

'நதிகளிலே நீராடும் சூரியன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது சென்னையில் இதன் படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

முதற்கட்டப் படப்பிடிப்பு 10 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது சிம்புவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்துக்கு இடையே 'பத்து தல' படத்திலும் கவனம் செலுத்த சிம்பு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x