Published : 05 Jul 2021 05:36 PM
Last Updated : 05 Jul 2021 05:36 PM

மீண்டும் இணையும் அக்‌ஷய் குமார் - ப்ரியதர்ஷன் கூட்டணி

மும்பை

ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மோகன்லால் நடித்துள்ள 'மரைக்காயர்' படத்தைத் தொடர்ந்து, இந்தியில் 'ஹங்கமா 2' படத்தை இயக்கியுள்ளார் ப்ரியதர்ஷன். இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஆகஸ்ட் 12-ம் தேதி 'மரைக்காயர்' படம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார் ப்ரியதர்ஷன். தற்போது அந்தக் கதையில் அக்‌ஷய் குமார் நடிப்பது உறுதியாகியுள்ளது. 'ரக்‌ஷா பந்தன்' படப்பிடிப்புத் தளத்தில் அக்‌ஷய் குமார் - ப்ரியதர்ஷன் சந்திப்பு நடைபெற்றது.

'ஹீரா ஃபெர்ரி', 'கரம் மசாலா', 'பூல் ஃபூலையா', 'பாஹம் பாக்', 'தி தனா தான்' மற்றும் 'கட்டா மிட்டா' ஆகிய படங்களில் அக்‌ஷய் குமார் - ப்ரியதர்ஷன் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து இந்தப் புதிய படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் தான் ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் அக்‌ஷய் குமார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x