ஓடிடியில் 'வாழ்' வெளியீட்டுத் தேதி முடிவு

ஓடிடியில் 'வாழ்' வெளியீட்டுத் தேதி முடிவு

Published on

ஓடிடியில் 'வாழ்' படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

'அருவி' இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழ்'. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்று வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

தனது 'அருவி' படம் போலவே, முற்றிலும் புதுமுகங்களை வைத்து 'வாழ்' என்னும் படத்தை இயக்கினார். இதற்கு தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இறுதியாக, ஓடிடியில் 'வாழ்' வெளியாகவுள்ளது. சோனி லைவ் நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியது. தற்போது ஜூலை 16-ம் தேதி 'வாழ்' வெளியாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in