Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

நயன்தாராவின் 4 படங்கள்

தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்பது உள்ளிட்ட சில படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, அடுத்தடுத்து 4 படங்களின் கதைகள் கேட்டு உறுதி செய்துள்ளார்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பு நிறுவனமான ‘அபிஷேக் பிலிம்ஸ்’ நிறுவனத்துக்கு 2 படங்கள், ட்ரீம் வாரியர்நிறுவனத்துக்கு 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவை நான்கும் நாயகியை மையமாகக்கொண்ட திரைப்படங்கள். இதுதவிர தெலுங்கில் 2 படங்களுக்கு கதை கேட்டு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x