Published : 22 May 2021 07:35 PM
Last Updated : 22 May 2021 07:35 PM

பிரபாஸ் உடன் இணையும் ஜோதிகா?

சென்னை

'சலார்' படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'கே.ஜி.எஃப்' படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சலார்'. 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. கரோனா 2-வது அலை தீவிரத்தால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக இன்றியமையாத கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து மொழிகளிலும் 'சலார்' திரைப்படம் வெளியாகவுள்ளதால், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்தபோது, "இப்போதைக்கு 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. வேறு எந்தவொரு படத்துக்காகவும் அவர் கதை கேட்கவில்லை. இந்தச் செய்தி வதந்தியே" என்று தெரிவித்தார்கள்.

2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி 'சலார்' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கரோனா 2-வது அலை தீவிரம் குறைந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு தீர்மானித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x